Tuesday, 18 February 2014

Veeramangai velu naachiyar

வீரமங்கை வேலு நாச்சியார்

நமது பாரத நாடு ஆங்கில ஆளுமையின்கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் மீரட் நகரத்தில் தோன்றிய சிப்பாய்க் கழகத்தின் மூலமாக முதல் இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கியது .1858 ஆம் ஆண்டில் ஜான்சி ராணி என்றழைக்கப்பட்ட ‘ராணி லக்ஷ்மி பாய்’ ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து தானே போர்க்களம் புகுந்து போர்புரிந்து வரலாற்றில் இடம் பிடித்தாள்.

இதுதான் நாம் படித்த வரலாறு. இந்த வரலாறு உண்மைதான். ஆனால் சில உண்மைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

இவை அத்தனையும் நடப்பதற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆண் வேடம் தரித்து வாளெடுத்துப் போர் புரிந்த ஒரு தமிழச்சியின் வீர வரலாறு மறைக்கப் பட்டது.
ஆங்கிலேயரின் ஆளுமையை எதிர்த்து துடித்தெழுந்த நம் தமிழரின் முதல் விடுதலைப் போராட்ட வரலாறு மறக்கப்பட்டது.

தன் உடலை எரியூட்டிக்கொண்டு வெடிமருந்துக் கிடங்கினுள் புகுந்து அதை அழித்து ஆங்கிலப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய அனேகமாக உலகத்தின் முதல் பெண் தற்கொலைப் போராளியின் அடையாளம் அழிக்கப்பட்டது.
— in Sivagangai.

No comments:

Post a Comment